Cop suspended for over enthusiasm at Kejriwal swearing in
கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் வாழ்த்தி கோஷமிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் Cop suspended for over enthusiasm at Kejriwal swearing in
புதுடெல்லி, டிச. 30-
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். இதற்காக ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் டெல்லி ஆயுதப்படை போலீஸ் 4-வது பட்டாலியன் படை ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவரான ராஜேஷ் குமார் என்பவர், கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றதும் உற்சாகமிகுதியில் அவரை வாழ்த்தி கோஷமிட்டார்.
பேரிகார்டு மீது ஏறி நின்று கோஷமிட்ட அவர், டெல்லி காவல்துறையை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். பின்னர் அவரை சக போலீஸ்காரர்கள் கீழே இறக்கி, அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர்.
இவ்வாறு போலீஸ் உடையில் பணியில் இருக்கும்போது தனிப்பட்ட முறையில் வாழ்த்தி பேசியதால் அவர் மீது காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், துறைரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.
...
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.