Robbery gang arrested in Delhi with weapons டெல்லியில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளைக் கும்பல் கைது Robbery gang arrested in Delhi with weapons
காசியாபாத், டிச. 20-
டெல்லியிலுள்ள முராத்நகர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளைக் கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், பொறி வைத்து
8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடித்தது.
அவர்களிடம் இருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள், 3 கத்திகள், 2 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட அனைத்து கொள்ளையர்களும் 26-லிருந்து 33 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் 12க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக இவர்கள் தொழிற்சாலைகளில் புகுந்து திருடுவதில் வல்லவர்கள் எனவும் கூறப்படுகிறது.
கொள்ளைக் கும்பலின் கூட்டாளிகள் குறித்து மேலும் விசாரணை நடைபெறுகிறது. எனவே, மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
...
Robbery gang arrested in Delhi with weapons
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.